ராணிஅலெக்சாண்ட்ரிய |
மருத்துவர் பிலிப் என்பவருடன் ஜார் அரசி அலெக்சாண்ட்ரியா உடன் நாடு மற்றும் கடவுள் போன்றவற்றை குறித்து விவாதிப்பது வழக்கம் அச்சமயம் மருத்துவர் பிலிப் கடவுள் குறித்து விவாதத்தின் பொது ரஸ்புடின் குறித்து கூறுகிறார்.
ரஷிய அரசர் மற்றும் அரசி ரஸ்புடினை 1905 -1906 இந்த வருடங்களில் சொற்ப அளவிலேயே சந்தித்து உள்ளனர், அந்த சந்திப்பின் போது ரஸ்புடின் தனது அமானுஷ்ய சக்திகளை உபயோகபடுத்தாமல் இயல்பான முறையில் அவர்களை எதிர்கொண்டுள்ளார்,
இளவரசர் அலெக்சி |
ஹீமோபீலியா என்பது காயம் ஏற்பட்டால் ரத்தம் வெளிவந்து உறையாமல் தொடர்ந்து வெளியேறும் ஒரு வகை மரபு நோய், மிகவும் நோய் வாய்ப்பட்ட முறையில் இருந்த அலேக்சியை கவனித்து கொள்ளவும் பாதுகாக்கவும் தனி பாதுகாவலர் நியமிக்க பட்டார் இந்த செய்தி மக்களுக்கு தெரியாத வண்ணம் அரசரும் அரசியும் பார்த்து கொண்டனர் அதே சமயம் அலேக்சியின் நோயின் காரணமாக அவரால் இயல்பான வாழ்வை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.
அரசியின் ஆலோசகரான பிலிப் ஏற்க்கனவே ரஸ்புடின் குறித்து புகழ்ந்து பேசியதை கேட்ட அரசி ரஸ்புடினை தனது மற்றும் தனது மகன் வாழ்வின் மிக முக்கியமானவராக கருதினார்.அதற்க்கேற்ப்ப பிலிப்பும் ரஸ்புடினை அரசியின் வாழ்வில் ஏற்பட்டா துயர்களை களையும் வண்ணம் அவரிடம் அனுப்புகிறார்.
ரஸ்புடின் அரச குடும்பத்தின் வாரிசை தனது நோய் தீர்க்கும் ஆற்றல் மூலம் ஹீமோபீலியா நோயில் பிடியில் இருந்து விடுவிக்கிறார், இந்த நிகழ்வே அவரை அரச குடும்பத்தில் மிக முக்கிய இடம் பெற காரணமாயிற்று,
ரஷிய அரச குடும்பம் |
இந்த நிகழ்வினை குறித்து அலேக்சியின் மூத்த சகோதரி தனதுகுறிப்புகளில் இவ்வாறு எழுதி உள்ளார் :
"அவனுடைய கண்களுக்கு கீழே கருவளையம் படர்ந்து இருந்தது மேலும் அவனது சிறிய உடலும் நோயினால் சிதைக்கப்பட்டு இருந்தது, அவனது கால்கள் வீக்கமாக இருந்தது,மருத்துவர்கள் செய்வதறியாது தங்களுக்கு பேசிக்கொண்டு இருந்தனர்,என்னை அறைக்கு செல்லுமாறு வற்ப்புருத்தபட்டேன்,அலிக்கி(alicky )செயின்ட் பீட்டர்ஸ் பெர்கில் இருந்த ரஸ்புடினுக்கு இந்த செய்தியை அனுப்பினார்.அநேகமாக நள்ளிரவு அல்லது அதற்க்கு அதற்க்கு பிறகே ரஸ்புடின் அரசமாளிகைக்கு வந்ததாக தெரிகிறது, பிறகு விடியற்காலை அலிக்கி என்னை அலெக்சி அறைக்கு செல்லுமாறு கூறியதும் நான் அங்கு சென்ற பார்த்தபொழுது என் விழிகளை என்னால் நம்ப முடியவில்லை அலெக்சி தற்பொழுது நோயுடன் போராடவில்லை நலமுடன் காணபட்டான்,அவனது கண்கள் தற்பொழுது பிரகாசமாகவும் அவன் படுக்கையில் அமர்ந்தும் அதே சமயம் தனது பாதங்களை ஊன்றி எழுந்து நின்று பிரார்த்தனையும் கூட செய்தான் அவனிடம் நோயின் தாக்கம் இல்லாமல் இருந்தது,பிறகே அளிக்கியிடம் இருந்து அறிந்து கொண்டேன் ரஸ்புடின் அலேக்சியை தொடக்கூட இல்லை ஆனால் குணபடுத்தி விட்டார் "
No comments:
Post a Comment