அமானுஷ்யம்: கல்ப விக்ரஹமும் மர்மங்களும் -1

Monday, June 13, 2011

கல்ப விக்ரஹமும் மர்மங்களும் -1

விக்ரகத்துடன் கூடிய கையெழுத்து பிரதியினை, அதில் இருந்த வாசகத்தை அதன் அர்த்தத்தை அறியCIAவிற்கு ஏறத்தாழ இரண்டு ஆண்டுகள் ஆனது. இந்த பணியில் இந்தியாவை மற்றும் நேபாளத்தை சேர்ந்த ஊழியர்களும் இணைந்து பணியாற்றினார். வரலாற்றுக்கு அப்பாற்பட்ட அந்த மொழி சமஸ்க்ரிதம் தொடர்பு உடையது வரலாற்றுக்கு முற்பட்ட இந்தியர்களின் மொழியாக இருக்கலாம் என கணித்த வரலாற்று அறிஞர்களும் சரித்திர அறிஞர்களும் முடிவு செய்தபின் இறுதியாக அந்த கையெழுத்து பிரதியில் உள்ள வாசகத்தினை அறிந்து கொண்டனர், அது அந்த விக்ரஹத்தின் பெயரை சுட்டுவதாக இருந்தது.

கல்ப மகா ஆயுஷ்யம் ரசாயன விக்ரஹா

CIAதனது கோப்பில் கல்ப விக்ராஹமாக சுருக்கி குறிப்பிட்டது,

இனி அந்த கல்ப விக்ரஹத்தின் அமைப்பு பற்றி சற்று பார்ப்போம். பித்தளை போன்ற ஒரு வித உலோகத்தில் செய்யப்பட்ட இந்த சிலையின் எடை வெறும் 47.10 கிராம் மட்டுமே, சிவனை போல தோற்றமுடைய ஒற்றை காலை மடக்கி உள்ள தோற்றத்தில் காணப்படும் அந்த சிலையின் தலை பகுதியில் பாம்பினை கொண்டதாகவும், கழுத்தினால் ருத்ராக்ஷத்தினை போன்ற மாலை அணிந்தவராகவும், தனது வலக்கரத்தில் வட்ட வடிவ ஒன்று அநேகமாக சுதர்ஷன சக்ரம் போன்ற ஆயுதம் தாங்கியும் உள்ளார். மற்றும் ஒரு கையில் சங்கும் கனமான வட்டு போன்ற ஒன்றை கொண்ட நிலையில் அந்த சிலை உள்ளது .5.3 சென்டிமீட்டர் உயரமும் ,4.7 சென்டிமீட்டர் உயரமும் அதன் அடிப்பகுதி 2.5 சென்டிமீட்டர் நீளமும், 1.7 சென்டிமீட்டர் அகலமும் மட்டுமே உடைய கொண்ட இவ்வளவு சிறிய சிலை மிக பாதுகாப்பாக இந்த பேழையினுள் வைக்க பட்டு இருக்கிறது எனில், அது உண்மையில் மகத்துவம் மிகுந்ததாக இருக்க வேண்டும். அதன் மகத்துவம் என்ன CIA ஆர்வம் கொண்டது

இது குறித்த அனைத்து ஆவணங்களையும் தன்வசம் எடுத்து கொண்டது .CIA அங்கே கல்ப விகரகம் குறித்த அனைத்து ஆவங்களும் ஸ்டோர் ரூமில் இருந்ததற்கான மற்றுமாய்வு குறித்த அனைத்து ஆவணங்களும் மறைக்கப்பட்டது.

மற்றுமொரு ஓய்வு பெற்ற CIA அதிகாரியின் ரகசிய வாக்குமூலத்தின் படிCIAவின் ரகசிய சோதனைகள் நடைபெறும் இடமான langley virginiya வில் இது குறித்து பல ஆய்வுகள் நடத்தப்பட்டதாக கூறுகிறார் .அந்த ஆய்வு கூடங்களில் பல அசாத்திய ஆய்வுகள் நடை பெறுவதாகவும் கூறுகிறார் அந்த அதிகாரி.

மிகவும் ரகசியமாக நடத்தப்பட்ட ஆய்வுகளில் மிக முக்கியமானது நீர் ஆய்வு. ஒரு நாளைக்கு ஒரு டம்பளர் வீதம் மூன்று நாட்கள் கல்ப விக்ரகம் இருந்த நீரினை அருந்த வேண்டும். CIA வின் ஆய்வுகளில் இது மிக முக்கியமானதாக கருத்தப்பட்டது .அவ்வாறு அருந்துவது மூலம் ரசாயன கல்ப விக்ரகம் எந்த மாற்றத்தை ஏற்படுத்த போகிறேதென அதிகாரிகள் ஆர்வம் கொண்டிருந்தனர். அதே போல கல்ப விக்ரகம் இருந்த நீரினை ஆய்வு கூடங்களுக்கு அனுப்பி அத்தனை சோதனை செய்து மாற்றங்கள் குறித்து அறிந்து ஆர்வம் கொண்டிருந்தார் CIA இயக்குனரான ஜான் மேக்கோன்.


ஒன்பது பேர் அடங்கிய நீர் குழுவானது இந்த நீரை சந்தேகத்திற்கு இடமேர்ப்படாத வகையில் ,பொதுமக்களுக்கு வயது வித்தியாசமின்றி அருந்த சொல்லி சோதனையை மேற்கொண்டனர். பெரும்பாலும் கவனக்குறைவாக பலர் இந்த நீரை அருந்த வில்லை சிலர் சரியாக கடைபிடித்தனர்.

நீர் சோதனைகளை ஒருவழியாக சியா முடித்து கொண்டது இருந்தாலும் இது குறித்த முடிவுகள் பற்றி ஏதும் சரியாக அறியாத நிலையில், சில பல காலங்களுக்கு பிறகு டிசெம்பர் 2008 ஆம் ஆண்டு ஒரு தொலைபேசி உரையாடல் அனைத்தையும் வெளிக்கொணர்ந்தது. நீர் சோதனையில் ஈடுபட்ட ஒரு அதிகாரி இன்னொரு அதிகாரிக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டார் அவர்கள் சிறு உரையாடல் இங்கே தரப்பட்டுள்ளது பெயர் மாற்றங்களுடன்,

மேக் என்னை நினைவு இருக்கிறதா, கல்ப விக்ரகம் என அழைக்கப்பட்ட ஹிந்து சிலை நீர் குறித்த ஆய்வில் சில விஷயங்களை சொல்ல அழைத்ததாக கூறுகிறார்.

கென் நீ தான் என்னை அழைத்ததா ,ஓய்வு பெற்று 32 வருடங்களுக்கு பிறகு அந்த சிலை பற்றி சொல்ல என்ன இருக்கிறது ?நான் அதை மறந்து போய்விட்டேன் அது தொலைந்து விட்டதா அது குறித்து என்ன இருக்கிறது பேச,

கென் மைக்ரோபயாலஜிஸ்ட் நிபுணத்துவம் வாய்ந்தவர் .இவர் CIA வில் 1946 இல் இணைந்த வயது 38 தற்பொழுது கென்னின் வயது 100, மேக் வயதோ 98 இப்பொழுது கென் நீர் சோதனையை பற்றி நினைவு கூறுகிறார். மேக் தான் ஆய்வில் நீரினை கொடுத்தவர்களை பற்றிய விவரங்களை தனது பழைய நாட்குறிப்பு மற்றும் இன்னும் சில வற்றின் மூலம் கூறுகிறார் . பிறகு நேரில் சந்தித்து கொள்ளும் இருவரும் இது குறித்த அனைத்து விவரங்களையும் குழு நண்பர்களையும் விவாதிக்கிறார்கள் பிறகு அனைத்தையும் சரி பார்க்கும் போது அவர்கள் கண்ட மிக முக்கிய விஷயம் இந்த கல்ப விக்ரக நீரினை அருந்தியவர்கள் மிக நீண்ட காலம் ஏறத்தாழ நூறு வயதுக்கு மேல் வாழ்ந்து உள்ளனர். அதாவது கல்ப ரசாயன விக்ரகம் மனிதர்களை மிக நீண்ட காலம் வாழவைக்கும் சக்தி கொண்டது எனபது மேலும் அந்த விக்ரகம் CIA பிடியில் இருந்து கடத்தப்பட்டு இந்தியாவில் இருப்பதாக கூறப்படுகிறது ,அதன் புகைப்படங்கள் இங்கே,









No comments:

Post a Comment