அமானுஷ்யம்: கல்ப விக்ரகமும் மர்மங்களும்

Friday, June 10, 2011

கல்ப விக்ரகமும் மர்மங்களும்

முதலிலேயே ஒரு விஷயத்தை இங்கே குறிப்பிட விரும்புகிறேன் ,இந்த தகவல்கள் அனைத்தும் அமெரிக்காவின் CIA நிறுவனத்தில் பணி புரிந்து ஓய்வு பெற்ற அலுவலர் வெளிபடுத்தியவை . இப்பொழுது விஷயத்திற்கு வருவோம் 47 கிராம் மட்டுமே எடை கொண்ட ஒரு வகையான பித்தளை போன்ற உலோகத்தினாலான மிக புராதனமான இந்து கடவுளின் அந்த சிலையை இழந்த அமெரிக்க CIAமிகுந்த வேதனயும் கவலையும் அடைந்தது.

அந்த சிலையை குறித்து சில வினாக்கள் அந்த சிலைக்கும் அமெர்க்கCIAநிறுவனத்திற்கும் என்ன தொடர்பு? ஹிந்துக்களின் கடவுள் சிலையை கொண்டுCIAசெய்த காரியம் என்ன? இவ்வளவு கவலை கொள்ளும் அளவு அந்த சிலையின் மர்மம் என்ன?

ஏறத்தாழ அறுபது ஆண்டுகளுக்கு முன்பு 1959-1960 திபெத்தின் ஒரு துறவிCIAஅதிகாரிகளிடம் ஒரு பேழையை மற்றும் அதனுள் அடங்கிய மிக முக்கியமான பொருளுடன் தருவதுடன், அதனை மிக கவனமாக பாதுகாக்கும் படி லோ மோந்தங் இடத்தில் தருகிறார் .அத்துடன் அந்த துறவி அந்த பேழையின் முக்கியத்துவத்தை இதற்குரியCIAஅதிகாரியிடம் கூறியதை ,அவர் அப்படியே இந்த பேழை மற்றும் அதனுள் இருக்கும் விக்ராகத்தினை பற்றி துறவி கூறியதை குறிப்பினை எடுத்துகொல்கிறார் . சைனா திபெத் போரில் துறவியும் மற்ற பாதுகாவலர்களும் கொல்லபடுகின்றனர் .இதன் பின்னர் அந்த பேழை இந்தியவின் வழியாக ரகசியாமாக தற்பொழுது அமெரிக்காவில் கொலராடோவில் உள்ள கேம்ப் ஹால் கொண்டு செல்லபடுகிறது .

சில வாரங்களுக்கு பின் அந்த சிலை கொண்ட பேழை வாஷிங்கடனில் உள்ளCIAஸ்டோர் ரூமில் "ST Circus Mustang-0183". என்ற லேபிளுடன் வைக்க படுகிறது.


சிலகாலம் கழித்து CIA வின் பார்வை அந்த பேழை மீது திரும்புகிறது ,அதன் உள்ளிருக்கும் பொருளின் மர்மம் குறித்து அறிந்து கொள்ளும் ஆர்வம் கொண்ட சியா, அந்த பேழைக்குள் வினோத கையெழுத்து பிரதி ஒன்றை கண்டேடுக்கின்றனர் . மேலும் மிக வினோதமான முறையில் வடிவமைக்கப்பட்ட அதனை மேலும் சோதனை உட்படுத்த முடிவு செய்கின்றனர் .அந்த பேழை செய்யப்பட்ட மரம் குறித்து அறிய ரேடியோ கார்பன் சோதனை செய்யபடுகிறது. அமெரிக்காவின் the University of California Radiation லபோரடோரி செய்யப்பட்ட ஆய்வு முடிவுகளை கண்ட CIA அதிகாரிகள் அதிர்ந்து போகின்றனர், காரணம் அந்த பேழை இந்த யுகத்தினுடயது இல்லை ஆம் ஹிந்துக்களின் காலகணக்கு படி துவாபர யுகத்தை சேர்ந்தது. ரேடியோ கார்பனின் ஆய்வுப்படி ஒன்பது அங்குல தடிமன் கொண்ட அந்த பேழையின் வயது ஏறத்தாழ 28450 வருடங்கள் ஏறத்தாழ குருஷேத்திர போருக்கு முந்தியது.

கல்ப விக்ரகம் கண்டெடுக்கப்பட்ட பேழை பண்டைய காலமுறை முடி கொண்ட அமைப்புடன் கம்பி கொண்டு பூட்டும் முறையில் இருந்தது, மேலும் பேழையின் நான்கு புறமும் எட்டு அங்குலம் தடிமனும் அதன் மூடியானது ஆறு அங்குலதடிமனும் கொண்டதாக இருந்தது, இதன் பலகைகள் தேக்கினால் செய்யபட்டும் பித்தளை போன்ற ஒருவித கலவை உலோக தகடு ஒரு அங்குல தடிமனுடன் பொருத்தப்பட்டு பலகையும் தகடும் கடையாணி மூலம் இறுக்கப்பட்டு பலகைகள் காலகாலத்திற்கும் காக்கும்படி பொருத்தபட்டிருந்தது. பேழையின் வெளிப்புற தோற்றமே அது பலகாலம் புதையுண்டு இருந்ததை கூறுவதாக இருந்தது.

மேலும் தொடருவோம்

No comments:

Post a Comment