அமானுஷ்யம்: அசாத்திய நிகழ்வுகள் அதிசய மனிதர்கள்

Monday, June 27, 2011

அசாத்திய நிகழ்வுகள் அதிசய மனிதர்கள்

சில விஷயங்கள் சில மனிதர்கள் வரலாற்றை பொறுத்தவரை அதிசயமாகவும் அற்புதமாகவும் நமது சிந்தனைக்குஅர்பாற்பட்டதாக இருந்தவர்களை இருப்பவர்களை பற்றி சற்று காண்போம்

பச்சை நிற குழந்தைகள்

ஆம் ஸ்பெயினின் பான்ஜோஸ் நகரத்தினருகே 1887 ஆம் ஆண்டு அங்கே இருந்தவர்கள் ஒரு குகையின் வாயிலில் இரண்டு சிறார்கள் பெற்றோரின்றி தனியே அழுது கொண்டு இருப்பதை கண்டுபிடித்தனர். ஆனால் அந்த சிறார்களின் மொழி அவர்களுக்கு புரியவில்லை நிச்சயமாக அவர்கள் ஸ்பானிஷ் மொழி பேசவில்லை எனபது அவர்கள் அறிந்து கொண்டனர் மேலும் அந்த சிறார்களின் தோல் நிறமானது பச்சை வண்ணமாக இருந்தது அவர்களுக்கு மேலும் ஆச்சர்யத்தை கொடுத்தது

பிறகு இரண்டு சிறார்களும் கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டு சிறிது நாட்களில் ஒரு சிறுவன் உணவு எதையும் உன்ன மறுத்த நிலையில் மரணமடைந்தான் .மற்றொரு சிறுமி வெகு காலம் கழித்து சாப்னிஷ் மொழியினை அறிந்த பிறகு தனது பூர்விகத்தை பற்றி கூறியது மிகவும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது அந்த பச்சை சிறுமி தங்கள் இருந்த இடத்தில் சூரியன் கிடையாது என்றும் அங்கே நிரந்தமான மெல்லிய ஒளி இருக்கும் என்றும் ஒரு பெரு வெடிப்பு ஒன்றை கேட்டதாகவும் ஏதோ விவரிக்க முடியாத ஒன்று தன்னையும் தனது சகோதரனையும் இந்த குகைக்குள் தள்ளியதாக தெரிவித்தாள். இன்னும் புரியாத புதிரான விஷயங்களில் இதும் ஒன்று

இரண்டு சிறுவர்களையும் குறிக்கும் நினைவு சின்னம்

நெருப்பு மனிதன்

இத்தாலியை சேர்ந்த பெனடேட்டோ அதிசய மற்றும் ஆபத்து நிறைந்த அமானுஷ்ய சக்திகள் மூலம் பிரபல்யமாக ஆரம்பித்தார் . பென் தனது பார்வையின் மூலமே நெருப்பினை ஏற்படுத்தும் சக்தியை கொண்டிருந்தார். பென் பார்வையின் மூலமே நெருப்பினை ஏற்படுத்துவதற்கு மேலாக தனது வருகை நிகழும் இடாங்களில் நெருப்பினை உண்டாகும் அசாத்திய சக்தியை கொண்டிருந்தார். 1982 ஆம் ஆண்டு முதன்முதலாக பெனின் இந்த அதிசய நெருப்பு தன்மை ஒரு பல் மருத்துமனையில் வெளிப்பட்டது, வரவேற்ப்பரையில் அமர்ந்து காமிக் புத்தகத்தினை பென் படித்து கொண்டிருந்தபோது அந்த புத்தகம் எந்த வெளி தூண்டுதல் காரணம் இன்றி பற்றி எரிந்தது .பிறகு ஒருநாள் காலை தனது படுகையில் பற்றிய நெருப்புடன் உடல் மற்றும் உடை எறிந்த நிலையில் மீட்கப்பட்டான் பென் .மற்று மொரு முறை பெனின் உறவினர் கையில் இருந்த பிளாஸ்டிக் பொருளை , பென் பார்த்த போது எரிந்து பொசுங்கியது.பென் செல்லுமிடங்கள் பார்க்குமிடங்களில் தோறும் காகிதங்கள் மரபொருள்கள் புகைந்து எரிய தொடங்கியது. மேலும் அவ்வாறான சமயங்களில் பென்னின் கைகள் ஒளிர்ந்ததாக கூறுகின்றனர் சாட்ச்சியாளர்கள். பென்னும் அசாத்திய மனிதர்களில் பென்னும் ஒருவர்.

No comments:

Post a Comment